Short story
March 2, 2019
சிறுகதை
SHARE

என்னவோ போல் இருக்கிறது.
உதடு உள்ளம் இரண்டிலும் வறட்சி.
சாய் பாபா கோவில் ஸ்டாப் ல் நின்று
நகர்கிறது பேருந்து.
நினைவுக்குளத்தில் ஏதோ மீன் நிந்துகிறது.
இல்லை மீன் இல்லை. திமிங்கலம்.
அவள் தான்.
ஒவ்வொரு பாய்ச்சலுக்கும்
நெஞ்சு தலை இரண்டிலும்
"விண் விண்"
ரணமான வலி.
"ஹான்"
"யாரு"
"டிக்கெட்"
"இல்ல சார்"
"ப்பேங் பீங்"
புற இரைச்சல்கள்.
மறுபடியும் "விண் விண்"
உள் வலி.
"ஐய்யோ ஐய்யய்யோ"
உள்ளிரைச்சல்.
இல்லை கதறல்.
எந்த ஒரு உறுப்பும்
என் கட்டுப்பாட்டிலும் செயல்பாட்டிலும் இல்லை.
என்ன செய்கிறேன்?
தெரியவில்லை.
எழுதிக் கொண்டிருக்கிறேன் போல.
இல்லை உளறுகிறேன்
டைப் செய்து கொண்டிருக்கிறேன்.
கொஞ்சம் இருங்கள்.
அங்கு நிற்கும் பெண்
அவள் போல இருக்கிறது.
இல்லை.
அது பெண்ணே இல்லை.
எல்லாம் என் பிரம்மை.
சிரிக்காதீர்கள்.
எனக்கு அழுகையாக வருகிறது.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...