Back
Short story
January 29, 2019
சிறுகதை
SHARE

இருளடரந்த அடர்வனத்தில் போகிற
ஒற்றையடி பாதையாய்
நேர் வகிடெடுத்து வாரிய கூந்தல்
சந்தனத்தோடு
சொட்டு சொட்டாய்
செஞ்சாயம் கலந்தது போலான நிறத்தில்
மஞ்சளும் சிவப்புமாய்
மதுர உடல்
மச்ச இதழ்
உதடுக்கு வலிக்காத சின்ன புன்னகை
அதி பரவளையமாய் இரு புருவங்கள்
முக்கோண நிலவாய் மூக்கு
பருவ வீக்கம் போல்
பரு அரும்பும் கன்னங்கள்
தலை கவிழ்த்து
தரை நோக்கும் பார்வை
நீ அழகி என்பதற்கு எத்தனை சாட்சியங்கள்..
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...