Back

Short story

October 10, 2018

சிறுகதை

SHARE

சிறுகதை

சகி,
சொல்வளம் இல்லாமல் போனேன். வா சகி. நீ தான் என் வார்த்தைகளின் ஊற்று. எண்ணக் கிணறு.நீயறுற்று நான் என்பது சுழியம். வெறுமை. என்னையும் ஒரு பொருளாக செய்தவள் நீ தான். உன் இல்லாமையால் வியாகூலப்பட்டு
கிடக்கிறேன். இலவம் பஞ்சை போல காற்றில் கரைந்து கொண்டிருக்கிறேன். நான் நிலம். நீ மண் புழு. என்னுள் நீயிருந்தால் தான் நான் விளை நிலமாவேன். ஒப்புதற்கரியளடி நீ. உனக்கு நிகர் யாருமில்லை. பிரியமுடன்
உனக்கெழுதுகிற நேசக் கடிதங்களை கூட விமர்சித்து, என் எழுத்தாளுமையை மேம்படுத்த முயல்வது நீ தான். என்னை விட என் மேல் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கிற வள் நீ தான். உன்னை வர்ணித்தெழுதுகிற கவிதைகளையும்
கூட மதிப்பீடு செய்து வரிகளைச் சொல்லி வாழ்த்துவாய். பிழை சுட்டுவாய். பிரியமுடன் திட்டுவாய். சகி, நீயே என் கவி விருட்சம். நீயே என் கதி மோட்சம். வா. வந்து விடு. கல்லாய் சமைந்து கிடக்கும் என்னை
உன் தீண்டுதலால் உயிர்ப்பி.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...