Short story
June 24, 2018
சிறுகதை
SHARE

வெகு அடர்த்தியான எழுத்து நடை. நாவலின் இலக்கணத்திற்கு அப்பாற்பட்ட நாவல். வாசிக்க வாசிக்க வாழ்க்கை யின் ஒவ்வாமைகளை உணர்த்துகின்றது. எழுத்தின் நோக்கத்தையும் எழுத்தாளனின்
நோக்கத்தையும் அத்தனை நுண்மமாய் விளக்குகிறது.கற்பனை இருளில் இருக்குமெனக்கு உண்மையின் ஒளி சூழ் உலகை அறிமுகம் செய்கிறது. ஒரு தெளிவில்லா குழப்பத்தையும் நிம்மதியில்லா
தன்மையும் தந்து என் தேடலை தூண்டுகிறது.வாழ்க்கையே ஒரு தீராத் தேடலென என்னை முடுக்கி விடுகிறது.உந்தித் தள்ளுகிறது. பொய்மைகளையும் கீழ்மைகளையும் போற்றி துதி பாடும்
எழுத்துகளை பின்னங்கழுத்தில் ஓங்கி அடிக்கிறது.எழுத்து கலையின் வலிவினையும் அது செய்யும் பாதிப்புகளையும் வியாக்கியானங்களற்று விளக்குகிறது.துல்லியத் தன்மையோடு சொன்னால் இது
நாவல் அல்ல. எழுத்தையும் எழுதுதலையும் வாழ்க்கையாய் கருதுமொரு சுத்த எழுத்தாள ஆத்மாவின் ஏக்க வெழுச்சிகள்.எண்ணத் தோன்றல்கள். பாதி வாசிப்பதற்குள்ளே என்னில் நிறைய பாதிப்புகள்
நிகழ்ந்து விட்டன.மீதி வாசிப்பும் இனிதே.. ❣️❣️❣️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...