Short story
June 24, 2018
சிறுகதை
SHARE

செவியூடுருவி இதயப் பரப்பில் மெல்லதிர்வுகளை உண்டு பண்ணுகிறது இசை.நாத வெள்ளம் ரத்தத்தோடு ரத்தமாய் கலந்து உயிரின் உட்சுவரை தீண்டுகிறது. பசி, பிணி, தாகம், மோகம், சோகம்
அத்தனையையும் மறக்கடித்து ஏதோ சுக உலகில் தள்ளுகிறது.ஒரு கணம் இதயத்தை கன்னாபின்னாவென்று கசக்குகிறது மற்றொரு கணம் மயிலிறகாய் வருடுகிறது. பிரவசப் பொழுதில் பெண்ணனுபவிக்கிற
வலியான சந்தோசம். வாழ்தலை நீட்டுவிக்கிற சந்தோசம்.இசையற்று போயின் துக்கங்கள் என்னை தூக்கி விழுங்கி விடும். கடவுளாகிற வாய்ப்பிருப்பின் இந்த சந்தோஷ காற்றை, சங்கீதக் காற்றை
சதை கொண்ட பெண்ணாய் மாற்றி சம்சாரமாக்கி சரச விரசங்களற்ற சந்தோஷம் அனுபவிக்க வேண்டும். எங்கு தொட்டாலும் அங்கிருந்து சங்கீத சுரங்கள் புறப்படும் அவளை தினம் தின்று தீர்க்க
வேண்டும்.அடித்தாலும் கடித்தாலும் அவளில் இருந்து வருகிற தாள மேள வீணை அதிர்வுகளை கேட்டு சுகிக்க வேண்டும். தட்ட தட்ட தாளகதி தப்பாமல் அழும் அவளின் அபஸ்வரங்களையும் ஆழ்ந்து
லயித்து அனுபவிக்க வேண்டும். ❣️❣️❣️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...