Short story
May 8, 2018
சிறுகதை
SHARE

உன்னை நினைப்பதற்கும்
காதலிப்பதற்கும்
விதியை காரணமாக்கி கொள்கிறேன்.
ஏய்...
குள்ளத் தமிழே...
என் குமரிக் குழந்தையே...
பேசி பேசியே
நெஞ்சில் காதல் அலை வீசி போனவளே
ஒரு சிலந்தியை போல
மெல்லிய வலையில்
என்னை சிறையிருத்தி விட்டாய்.
உன் கன்ன கதுப்பில்
என் எண்ணங்கள்
களவு கொண்டாய்.
எச்சிலூறிய
கீழதரத்தால்
என் உதிர்த்தில் உலையேற்றி விட்டாய்.
குட்டி தொப்பை தாங்கி நிற்கும்
கொடி இடை கொண்டென்னில்
அன்பின் நெடியுடைய பூக்கள்
ஆயிரம் பூப்பித்து விட்டாய்.
கூந்தலை அலையாட விட்டு
உன் தளிர் உடலில் விளையாட விட்டு
என்னில் ஏக்கத் தழல் த
எரிய விட்டாய்.
புறத்திலிருந்தே
என் ஐம்புலன் இயக்கும்
மூளையை ஆட் கொண்டாய்.
கவிதைக்கு பொருளானாய்.
கனவுக்கு இருளானாய்.
என்னில் அன்பின் திரளானாய்.
என் செல்லக் கிரதாகியே
என்னை ஏன் கிறுக்காக்கனாய் .?
எங்கோ தொடங்கிய உறவு
எனக்கு நீ
உனக்கு நான் என்று வந்து நிற்கிறது.
நீயே என் வாழ்வின் மூலதனம்.
வா.
வந்து என்னை சேர்.
என்னில் பாதி நீ கொள்.
உன்னில் பாதி நானேற்கிறேன்.
நான் சிவம்.
நீ சக்தி.
அன்பே...
இது பால் ஈர்ப்போ என்று
பயந்து பயந்து தான்
முன் உன்னை நெருங்காமல் இருந்தேன்.
இப்போது உணர்ந்து கொண்டேன்
என் இதயத்தை கை கொண்டாய்.
என் இளமையையும் தான்.
என் எல்லா அணுவிலும்
உன் பெயர் எழுது.
உன்னை என்னில்
உற்று.
என் உயிரில் காதல் திரியேற்று.
நிறைய முறுப்(முத்தப்) புள்ளிகள் இட்டு
என் கவிதைகளை நீட்டுவி...
உன் கட்டளைகளால்
என்னை ஆட்டுவி..
நான் என்ற
வெற்று காகிதத்தில்
நீயென்ற கவிதையை
இட்டு நிரப்பு.
இல்லா விட்டால்
வீண் தான் எனக்கிந்த பிறப்பு.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...