Back

Short story

January 1, 2018

சிறுகதை

SHARE

சிறுகதை

💛💜💙

❣️என் விந்தில்
வந்துதியா
என்னினும் இளையாள்(மூத்தவளாய் இருந்தாலும்) உன்னை
என் மூத்த மகளென
பிரியமொழுக நேசிப்பேன்.

❣️உனக்கு பிடித்ததையும்
உன் பிடிவாதத்தையும்
எனக்கு பிடித்ததாக்கி கொள்வேன்.

❣️குளித்து வரும் உன்
ஈரக் கூந்தல் உலர்த்துவேன்🙎.

❣️வலிக்காமல்
வகிடெடுத்து தலை வாருவேன்👧.

❣️சாதி மல்லி🌼 வாங்கி வந்து
சரம் தொடுத்து
உன் கருங்கூந்தலில்
காதல் மணக்க சூடுவேன்.

❣️புருவ மத்தியில்
மையிடுவேன்.

❣️உன் அழகை
கண்ணொற்றி கை நெட்டி முறித்து
நடு நெற்றியில் முத்தம் வைப்பேன்.

❣️சிறு பிள்ளையென
உன் கட்டளைகளுக்கு அடி பணிவேன்🙈🙉🙊.

❣️உனக்கு பிரியமானதை வாங்கி தந்து
உனதந்த குறுநகையை ரசிப்பேன்💟.

❣️உன்னை என் உயிரென ரட்சிப்பேன்.

❣️அந்த ஐந்து நாட்களில்
இரத்தகறை படிந்த
உன் ஆடைகளை
துவைப்பேன்...
உன் பெண்மையின் கஷ்டங்களுணர்ந்து
உனக்கு ஓய்வு தந்து நான் சமைப்பேன்
மற்ற நாட்களில்
உன்னோடு ஒத்துழைப்பேன்👨‍❤️‍💋‍👨.

❣️அடிக்கடி செல்ல சண்டைக்கழைப்பேன்😝.

❣️அதி காலை பனியில்
உன் விரல் கோர்த்து நடப்பேன்.

❣️உன் கால் கொலுசோசையில் லயித்து
கண் மூடி கிடப்பேன்🙈.

❣️உன்னை அடம்பிடிக்கும் போது
கெஞ்சி கொஞ்சுவேன்.

❣️என் கையால் சோறூட்ட
உன் கைகளுக்கு
மாதமொரு முறை
மருதாணி பூசுவேன்.💅

❣️உன்னை
உறங்க வைத்து
கால் விரல்
கை விரல்
சொடுக்கெடுப்பேன்.

❣️உன்னை தாயாக்கி பார்க்கும் முன்
என் தாயாக பார்ப்பேன்💑.

❣️எங்கு போனாலும்
உன் முந்தானை பின் தொடர்வேன்👣.

❣️உறங்கும் போது
வியர்வை வாடை யடிக்கும்
உன் சேலையை
போர்த்தி கொள்வேன்.

❣️ஆ காட்டி சோறூட்ட சொல்லி
அடம் பிடிப்பேன்.

❣️ஊட்டி விடும்
உன் பிஞ்சு விரல்களை
கொஞ்சம் வலிக்கும் படி கடிப்பேன்☺️.

❣️நீ திட்டி வலிக்காது போனாலும்
அழுவதை போல் நடிப்பேன்😝.

❣️அழாதடா தங்கம் என
அன்பு ததும்ப கெஞ்சும் உனை
காமம் ஏதுமற்று
கட்டி பிடிப்பேன்.

❣️மின்சாரமில்லா இரவுகளில்
வியர்க்கும் உனக்கு
சாமரம் வீசுவேன்💙.

❣️உறக்கம் வராத போது
உன்னை மடியில் கிடத்தி
தலை கோதி
தாலாட்டுவேன் .

❣️காய்ச்சல் வந்தால்
கம்பளி போர்த்துவேன்

❣️உறக்கத்தில்
விலகி கிடக்கும்
உன் ஆடைகளை நேர்த்தி செய்வேன்.

❣️தூங்கியெழுந்து
கண் திறந்தும்
திறவாமால்
என் நெற்றியில்
உன் உஷ்ண முத்தம் கேட்பேன்.

❣️காலையில் உனக்கு முன்னெழுந்து
உன் முகம் கழுவி துடைத்து
இளம் பதமாய்
குடிக்க தேநீர் தருவேன்.

❣️குளிக்க வெந்நீர் வைக்க மறவேன்.

❣️இன்னும் நூறு ஜென்மங்களெடுத்தாலும்
இப்படியே உன்
அன்பான
அடிமையாய்
உன்னுடன் வருவேன்.

❣️உனக்கு தேவையெனில்
என்னுயிரையும் தருவேன்💜💛.

❣️என்னை நீ பிரிந்தாலோ
வெறுத்தாலோ
அப்போதே இறப்பேன்.

❣️மரிக்கும் முன்
என் மரிக் கொழுந்துன் முகத்தை
மகிழ்வு ததும்ப பார்ப்பேன்👀.

❣️உனை வளைத்திழுத்து
வாயருகே கொண்டு வந்து
தாயானவளுனை
முத்தம் மிட்ட படி
என் மூச்சு தீர்ப்பேன்💏.

❣️என் பிரிவை நினைத்தழுதால்
மறுகணமே உன் மகனாக பிறப்பேன்👩‍👩‍👧.

❣️அட்சய பத்திரமென
உனக்கென எப்போதும்
அன்பு சுரப்பேன்.
எப்போதும் உன் அருகில் இருப்பேன்.

💞💞💞

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...