Back

Short story

October 21, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை

https://m.facebook.com/story.php?story_fbid=533562713670625&id=100010507024645 "மன்மதனே மாருதனே தின்ன ஆகாதவள் என்னை மணந்து என்ன செய்வாய்? உண்மையில் சொன்னால்
எனக்குநீ நினைக்கும்படி பெண்ணையில் மட்டுமல்ல உடலிலும் ஊனம் நன்மைக்கு சொல்கிறேன் நலம்வாழ சொல்கிறேன் இன்னமும் பேசி இதயத்தை குழைக்காதே தங்கமே! தாங்காது தசையாலான நெஞ்சு
பொங்கி வருமாசைகளை பொத்தி வைக்காமல் போட்டு உடைத்து விட்டேன்! உன்னிடம் கேட்டுத் தொலைத்து விட்டேன்.! உந்தன் வார்த்தையில் மட்டுமே வாழ்வுற ஆசை"யென்றழுதாள். வீர்ரென
விறையும் அம்பென நானும் பார்வை யொன்றை பாவையவள் மேல்வீசி " மார்தைக் காதே மாணிக்க பெண்ணே யார்சொன்னாலும் கேட்கவும் ஏற்கவும் மாட்டேன்! வார்த்தைக் கொருத்தி வாழ்வுக்
கொருத்தியா? கட்டிலுக் கொருத்தி கவிதைக் கொருத்தியா.? எட்டிக் கனியாய் கசிக்கிறது எண்ணும்போதே! என்ன நினைத்தாய் என்னை? அன்று கண்ணகிக்கு கோவலன் செய்த ததினும் பெரியதோரு
பாவச்செயல் பண்ணச் சொல்கிறாய் சிறியாரும் ஏசும் பாவியாகச் சொல்கிறாய். முடியாதடி என்னினும் மூத்த முத்தே!"யென வெடித்து விட்டேன் வேதனையில் துடித்துவிட்டேன். இதையெல்லாம்
கேட்டவள் அவளும் எதையோ யோசித்தாள்! சிரித்தாள்! அழுதாள்! சட்டென அழுவதை நிறுத்தி என்னையேதோ கேட்டாள் ! இதயத்தை கிழித்து போட்டாள்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...