Back

Short story

October 21, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை

அன்புள்ள அப்பாவுக்கு,
நான் உங்கள் மகள் பேசுகிறேன்.சிறுவயதிலிருந்தென்னை அன்போடு மார் சுமந்து,கேட்டதை எல்லாம் கடன் வாங்கியேனும் வாங்கி தந்து வளர்த்து ஆளாக்கிய உங்கள் மீதெனக்கு அளவு கடந்த பிரியமுண்டு அப்பா.அதென்னமோ
தெரியவில்லை இருபது வருடங்களாய் வளர்த்த உங்கள் மீதுள்ள அதே அளவிலான பிரியம் யாரென்றே தெரியாமல் அவன் காட்டுகின்ற சின்ன பிரியங்களால் அவன் மீது உண்டாகிவிடுகிறது.பெண் என்றாலே இலகுவான இதயம் இருப்பது
இயல்பு தானே.ஆனால் அந்த அன்பிற்கு சாதி மதம் என்று எதுவும் தெரிவதில்லை.தனக்காய் ஒரு ஜீவன் தவிக்கிறதென்ற உடன் தன்னாலே பரிவும் பாசமும் பூத்துவிடுகிறது.இது சரியா?தவறா? என்று சத்தியமாய் தெரியாது

ஆனால் வாழ்ந்தால் அவனோடு தான் என்ற வைராக்கியம் உண்டாகிவிடுகிறது.என் முடிவில் உங்களுக்கு சம்மதம் என்று தெரியும் ஆனால் ஊர் பேசுமே என்று என் உயிரெடுத்து விட்டீர்.பரவாயில்லை.இது என்னோடு போகட்டும்
இனியும் இப்படி "வெட்டி விட்டு கட்டிப்பிடித்தழ வேண்டாம்".என் தங்கச்சிகளையேனும் பிணமேடை ஏற்றாமல் மணமேடை ஏற்றுங்கள்.
சாதி சாதி என்றலைந்து
சாம்பலை சம்பாதிக்காதீர்கள்.

#மீள்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...