Short story
September 16, 2017
சிறுகதை
SHARE

அவள் தீது சூது யாதுமறியாதவள். எல்லோராலும் நிரகாரிக்கப்பட்டவள். ஆனால் யாரையும் நிராகரிப்பவள் இல்லை. அன்பு என்ற சொல்லையும் வெறுப்பு என்ற சொல்லையும் அறியாதவள்.
அறிந்திருந்தாலும் அவற்றிற்கு அர்த்தம் தெரியாதவள். யார் ஏசினாலும் ஏற்றி பேசினாலும் மாற்றமில்லாமல் சிறு புன்னகையோடு கடந்து போவாள். கற்புக்கும் உடலுக்கும் சமந்தமில்லை
என்பாள். யாரையும் உரிமை கொண்டாட மாட்டாள் ஆனால் எல்லோராலும் உரிமை கொண்டாடப் பட்டாள். கண்மறைவாய் குறைசொல்பவர்களின் பேச்சு காதெட்டினாலும் கவலையுற மாட்டாள். உடை ஊடுருவி
உடலில் கம்பளிபூச்சியாய் மேயும் கண்களை எப்படித் தான் கடந்து போகிறாளோ தெரியவில்லை? எனக்கு வியப்பான பெண் அவள். எல்லோர்க்கும் வியாபாரமாகும் பெண் அவள். அவள் விபச்சாரி அல்ல.
காசில்லாமல் களவு கொள்ளப்பட்டவள். இங்கு யாரும் உத்தமரில்லை என்று உணர்ந்தவள். அவள் ஆடைகள் மூடி போன போது அம்மணமாய் பார்த்த கூட்டம். அவள் அரை குறையுமாய் போவதை குறை
சொல்கிறது. ஆபாசம் என்கிறது. அசிங்கம் என்கிறது? அப்படியானால் தான் மட்டும் கண்டால் ஆபாசம் அழகாகுமா? ஊர் கூடி கண்டால் அழகு ஆபாசமாகுமா? ஆச்சர்யம் தான். எனக்கும் அவளுக்கும்.
தன்னை ஆடை தான்டி அம்மணமாய் பார்த்த அயோக்கியர்கள் எப்படி? எப்போது? தான் அம்மணமாய் நிற்கிற போது பார்க்காது தவிர்க்கும் யோக்கியர்கள் ஆனார்கள் என்பதில். அவர்களை அவளாலும்
அவளை என்னாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளை தனக்குள் அம்மணமாக்கி பார்த்தவர்கள் அவளே தானாக அப்படி வந்து நிற்பதில் தவறென்ன கண்டார்கள்? ஊராரின் ஏச்சுகளாலும்
பேச்சுகளாலும் கண்களால் தான் வன்புணர்ச்சி செய்யப்பட்ட வலியோடும் அவள் வடித்த கண்ணீர் துளிகளோடு எஞ்சி நிற்கிறது என் கேள்வி அவள் அப்படி என்ன தவறு செய்தாள்?
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...