Back

Short story

September 15, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை

நான் யார்க்கும் நல்லவனில்லை. உங்கள் அன்பு பாத்திரமாகும் பாக்கியமும் எனக்கு இல்லை. நான் கடனுக்கு கூட காதல் செய்ய மாட்டேன். அன்பு என்ற சொல் என் அகராதியில் இருந்து அழிந்து
போய்விட்டது. நான் முரண்களின் மூட்டை. நான் முகமூடிக்காரன். நான் பொய் என்னையே நான் வெறுக்கிற போது உங்களை நேசிப்பதென்பது நிச்சயம் நிகழாத காரியம். யாரின் மதிப்பும் எனக்கு
தெரியாது. சொந்தமும் வேண்டாம் பந்தமும் வேண்டாம் பாசமும் வேண்டாம் நேசமும் வேண்டாம். எனக்கென யாரும் வேண்டாம் எனக்கென எதுவும் வேண்டாம். நான் நிரந்தர முகம் இல்லாதவன். நான்
நிகழ்காலத்தால் நிரகாரிக்கப்பட்டவன் நிகழ்காலத்தை நிரகாரித்தவன். நான் எனக்கன்றி யாருக்கானவனும் அல்ல. நான் எனக்கும் உங்களுக்கும் எப்போதும் அந்நியமானவன். நான் யார் மீதும்
விருப்பும் வெறுப்பு மற்ற நிலையில் இருக்கிறேன். எல்லாவற்றையும் போல நானும் நிரந்தரமானவனில்லை. எனக்கு எதற்கும் வரம்புகள் இல்லை. எப்போது வேண்டுமானாலும் எல்லை மீறுவேன் எப்போ
வேண்டுமானாலும் எதிரியாய் மாறுவேன். எப்போது வேண்டுமானாலும் யாரையும் இறப்பேன். ஏன் இப்போதே எல்லோரையும் இறக்கிறேன்.... உங்களையும் தான் இறக்கிறேன் ஏன் உன்னையும் தான்
இறக்கிறேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...