Back

Short story

September 9, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை

மனதில் கட்டி வைத்தேன்
மதிலோ டொரு கோட்டை.
கணத்தில் அழித்து விட்டது
காலம் செய்த சேட்டை.

நாட்டை திருத்த தினந்தினம்
நானெ ழுதிடும் பாட்டை.
ஆட்டி படைக்கு தம்மா
அயலானின் விமர்சன சாட்டை.

அறிந்ததை சொல்ல வந்தேன்
பிறர் அறிந்திட சொல்ல வந்தேன்.
சரித்திர புகழை எல்லாம்
சாதாரண சொல்லில் தந்தேன்.

தரித்திர புத்தி கொண்ட
தரங்கெட்ட அரசியலை நானும்
எரிக்க வளர்க்கும் தீயை
எந்தன் கவியினில் காணும்.

நன்றியை மறந்தா ரோடு
ஒன்றி வாழ்ந்து கொண்டு
நன்றியை நினைக்கும் நாயாய்
நடக்க ஆசையும் உண்டு.

நானெழுதும் பாட்டில் எப்போதும்
ரெண்டு பொருள் உண்டு.
நல்லதை அறிந்தெடு நண்பா
தீதை அறிந்து கொண்டு.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...