Short story
August 18, 2017
சிறுகதை
SHARE

அவளுக்கும் எனக்கும் திருமணம் முடிந்தது....! மாலையும் கழுத்துமாய் நின்றபடி மனதிற்கினியள் அவளோடு அன்றிரவு செய்யப் போகிற அமுத சுகம் தரும் கற்பனைக் கெட்டாத காரியங்களை
எல்லாம் எண்ணிப் பார்த்திருந்த நேரம் என் முகுளமும் முதுகுத் தண்டும் இணையும் இடத்தில் பொறுக்க மாட்டாத வலியோடு "அய்யோ" என அலறியபடி மல்லாக்க விழுந்த என் வாயில்
எவரோ மலம் அள்ளி திணிக்கிறார்கள் என் கை கால்களில் கத்தி வெட்டு விழ எவனோ என் ஆணுறுப்பு அறுக்கிறான் அதே நேரத்தில் இன்னொருவன் என் கையின் இரு கட்டை விரலையும் கத்தரிக்கிறான்
மற்றொருவன் என் மண்டையில் இருக்கும் மயிர்களை எல்லாம் கையால் புடுங்குகிறான் இப்படி எல்லாம் முடிந்த பின் ஏதோ செரிக்க மாட்டாத ஒன்றை விழுங்கிய மலைப்பாம்பாய் அசைவின்றி கிடந்த
என்னுள் இதய துடிப்போடு சேர்ந்து அந்த கேள்வியும் துடிக்கிறது "சாமி மாறி மணம் செய்வது சரியா? "
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...