Back

Short story

August 8, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை

#மாதவிக்கு. நேசப் பூங்குயிலே பாச வார்த்தை பேசிப் பேசி உன்னை படுகுழியில் தள்ளியவன் பேசுகிறேன். இன்னொருவள் காதலன் என்று தெரிந்தும் இதய வானுருக நேசித்தவளே உதய வானாய்
இருந்த உன் வாழ்வை இருள் படியச் செய்தவன் பேசுகிறேன். அதிகாலை பூவையெல்லாம் நதி போல பரப்பி வைத்தது போல் நல்ல மணம் வீச பிள்ளை மனதோடு பிரியம் செய்தவளே உன்னை பிரியப்போகிறவன்
பேசுகிறேன். நெருங்காதே நெஞ்சுருகாதே மனம் இறுகாதே ரணம் பொறுக்காதே அழுது ஆசுவாசப்பட்டு கொள். ஆனால் மெழுகாய் உருகிவிடாதே. நெஞ்சின் ஆழத்தில் இருந்து என்னை தூக்கி எறி.
காந்தத்தின் ஒத்த துருவம் போலத்தான் நான் எல்லை கடந்து என்னை யாரும் நெருங்கி விடக் கூடாது என்ற கொள்கையோடு இருக்கிறேன். கோகிலமே உயிர் கோபுரமே படிமக் காதல் செய்த நீ இடிந்து
விழும் படி இடி இறக்கி போகும் என்னை இனியும் நினைக்காதே இமையை நனைக்காதே. மீ்ண்டும் சொல்கிறேன் உன் இதய வீணை நரம்பறுந்து அழ மீட்டிச் செல்கிறேன் நெருங்காதே நெஞ்சுருகாதே.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...