Short story
August 6, 2017
சிறுகதை
SHARE

சிலப்பதிகாரத்தின் சிறப்பே மாதவி தான்.
கட்டியவளிருந்தும் அவளை விட்டு
கலை பால் உள்ள நேசத்தால்
தன் பால் தலை சாய்ந்த கோவலன் மீது
கொள்ளளவில்லா காதல் கொண்டு
உருப்பசி மரபில்
உதித்திருந்தாலும்
ஒரு நாளும் வழி தவறாமல்
நெஞ்சின் மீதும்
பஞ்சனை மீதும்
ஒருவனையே சுமந்து
சுத்த பத்தினியாயிருந்து.......
"மோகம் முப்பது நாள்" என்பதை சரியாக்கும்படி
தேகத் தேவை தீர்த்து கோவலன்
கண்ணகியை தேடிப் போகையில்
கற்புத் தீயுடைய மாதவி
அவனை கையிருத்தி வைக்கவில்லை
மாறாய் அவனை மனதிருத்தி கொண்டாள்
கைவிட்டு போனவனின் பிரிவில்
கலங்கி அழுதாலும்
அவன் இல் வாழ்க்கையில்
இடையிட்டு
அவனுக்கு இழுக்கு செய்யவில்லை.....
அரசனிடத்து வழக்கும் செய்யவில்லை.....
அவன் நினைவொன்றிலே வாழ்ந்து
அவன் தந்து போன
உயிர்துளியை உயிராக்கிய
தாழ் குடி பிறந்த
யாழ் பிடியா கலைமகள்
மாதவி எனும்
அந்த மாதரசி போலொரு
மனைவி வாய்க்க எனக்கு
கொடுப்பினை இல்லை என்றாலும்
கோவலனாய் வாழ எனக்கு
கொஞ்சமும் விருப்பில்லை......
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...