Back

Short story

June 19, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை

உள்ளிருந்து நீ உதைக்கும் வலி எப்படி இருக்கும் அடிக்கடி அடிவயிறு தட்டி பார்க்கிறேன். நிறைமாசத்தில் உன்னை சுமந்திருக்கும் என் வயிறு எப்படி இருக்கும்? துணிகளை மூட்டைகட்டி
ஆடை க்குள் துருத்தி அழகு பார்க்கிறேன். பிறந்த பின் ஆண்பிள்ளையா பெண் பிள்ளையா என கேட்போரிடம் என் பிள்ளை என சொல்ல காத்திருக்கிறேன். உன்னை எப்படி உறங்க வைக்கலாம் உண்ணும்
போதும் தாலாட்டு கேட்கிறேன். உன்னோடு எப்படி உறங்கலாம் தலையணையோடு தினம் ஒத்திகை பார்க்கிறேன். உறக்கத்தில் உன் கைகால்கள் என் மேல் விழுந்தால் உன் உறக்கம் கலையாமல் எப்படி
ஒதுக்கி விடுவது ஆடை விலகியதும் தெரியாமல் ஆழ்ந்து யோசிக்கிறேன். எச்சில் படாமல் எப்படி உன்னை முத்தமிடலாம் கண்ணாடியை முத்தமிட்டு கற்கிறேன். எதிர்பார நேரத்தில் என்னை நீ
முத்தமிட்டால் எப்படி இருக்கும் எண்ணி எண்ணி வெட்கப்படுகிறேன். இறுக்கமில்லாமல் உன்னை அணைப்பதெப்படி என்னை நானே அணைத்து பார்க்கிறேன். உன்னை எப்படியெல்லாம் செல்லம் கொஞ்சலாம்
உலகிலக்கியங்களை புரட்டி பார்க்கிறேன். உன் சின்னவாய் திறந்து சிநேகத்தோடு எப்படி என்னை அழைப்பாய் குயிலை கூவச் சொல்லி கேட்கிறேன். இப்படி ஏகபோக எதிர்பார்ப்புகளோடு என்
மலட்டு மார்களில் பால் சுரக்க காத்திருக்கும் இந்த வெத்து சிப்பியை முத்து சிப்பியாக்கி என்னோடு முத்தாட வருவாயா என் முத்தாரமே.

யுத்தப் பொழுதில்லை ரத்தம் கசிகிறேன். சத்தம் வரவில்லை கத்தி அழுகிறேன். சித்தத் தெளிவில்லை சிரித்தெழுகிறேன். தத்தத்தனனனா தத்தத்தனனனா....................

காற்றோடு கலந்த பூந்தேனும் ஆற்றோடு போகும் கருவாட்டு மீனும் நேற்றோடு இறந்த வெறுங்கூடு நானும் இன்னும் கண்டு கொள்ளப்படாமல்.

உள்ளிருந்து நீ உதைக்கும் வலி எப்படி இருக்கும் அடிக்கடி அடிவயிறு தட்டி பார்க்கிறேன். நிறைமாசத்தில் உன்னை சுமந்திருக்கும் என் வயிறு எப்படி இருக்கும்? துணிகளை மூட்டைகட்டி
ஆடை க்குள் துருத்தி அழகு பார்க்கிறேன். பிறந்த பின் ஆண்பிள்ளையா பெண் பிள்ளையா என கேட்போரிடம் என் பிள்ளை என சொல்ல காத்திருக்கிறேன். உன்னை எப்படி உறங்க வைக்கலாம் உண்ணும்
போதும் தாலாட்டு கேட்கிறேன். உன்னோடு எப்படி உறங்கலாம் தலையணையோடு தினம் ஒத்திகை பார்க்கிறேன். உறக்கத்தில் உன் கைகால்கள் என் மேல் விழுந்தால் உன் உறக்கம் கலையாமல் எப்படி
ஒதுக்கி விடுவது ஆடை விலகியதும் தெரியாமல் ஆழ்ந்து யோசிக்கிறேன். எச்சில் படாமல் எப்படி உன்னை முத்தமிடலாம் கண்ணாடியை முத்தமிட்டு கற்கிறேன். எதிர்பார நேரத்தில் என்னை நீ
முத்தமிட்டால் எப்படி இருக்கும் எண்ணி எண்ணி வெட்கப்படுகிறேன். இறுக்கமில்லாமல் உன்னை அணைப்பதெப்படி என்னை நானே அணைத்து பார்க்கிறேன். உன்னை எப்படியெல்லாம் செல்லம் கொஞ்சலாம்
உலகிலக்கியங்களை புரட்டி பார்க்கிறேன். உன் சின்னவாய் திறந்து சிநேகத்தோடு எப்படி என்னை அழைப்பாய் குயிலை கூவச் சொல்லி கேட்கிறேன். இப்படி ஏகபோக எதிர்பார்ப்புகளோடு என்
மலட்டு மார்களில் பால் சுரக்க காத்திருக்கும் இந்த வெத்து சிப்பியை முத்து சிப்பியாக்கி என்னோடு முத்தாட வருவாயா என் முத்தாரமே.

யுத்தப் பொழுதில்லை ரத்தம் கசிகிறேன். சத்தம் வரவில்லை கத்தி அழுகிறேன். சித்தத் தெளிவில்லை சிரித்தெழுகிறேன். தத்தத்தனனனா தத்தத்தனனனா....................

காற்றோடு கலந்த பூந்தேனும் ஆற்றோடு போகும் கருவாட்டு மீனும் நேற்றோடு இறந்த வெறுங்கூடு நானும் இன்னும் கண்டு கொள்ளப்படாமல்.

Ajithkumar இன் வசந்தகால நினைவுகள்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...