Short story
June 17, 2017
சிறுகதை
SHARE

எனக்கே நான் அந்நியமாகிறன். "யார் நான்? " என்ற கேள்விக்கு இன்னும் பதில் கண்ட பாடில்லை. அன்புக்கும் ஆசைக்கும் அடிமைபட்ட அழியுடலில் ஆத்மாவை இன்னுமேன் இழுத்து
வைத்திருக்கிறேன்.? காற்றில் பறக்க வேண்டிய பலூனை கயிற்றில் கட்டி வைத்ததைப்போல் ஆசைக்கயிறால் ஏன் இந்த ஆத்மாவை கட்டி வைத்திருக்கிறேன்.? இந்த நிலையில்லா உடலுக்குத்தான்
எத்தனை நிராசைகள்..? ஊருக்கு நல்லது சொல்லுமளவிற்கு நானென்ன நல்லவனா? நானே சரியில்லாத போது நாடு சரியில்லை எனச் சொல்வது சரிதானா? கண்ணெதிரே நடக்கிற குற்றங்களை கண்டும் காணாது
நடக்கிற நான் பேச நியாயம் என்ன இருக்கிறது? "மோருக்கு போகிறவள் மொந்தையை ஒழிய வைப்பது" போல் ஊருக்கு உதவுவதாய் சொல்லி விட்டு எனக்கானதை எடுத்து வைத்து கொள்ள
எனக்கென்ன உரிமையிருக்கு? "உறவுகளை துறந்தவனே ஊருக்கு உதவ முடியும்" என்ற உண்மையறிந்திருந்தும் உறவுகளோடு ஒட்டிக் கொண்டு ஊருக்கு உதவ நினைக்கும் என்னை நான் என்ன
செய்ய? எதிர்க்க துணிந்த நான் எதிர்ப்புக்கு துணியாமலிருப்பது ஏன்? "மனமிருந்தால் மார்க்கம் உண்டு" என்றார்கள் இங்கு மார்க்கம் நிறையவே இருக்கிறது எனக்கு மனந்தான்
இல்லை. ஊருக்கு ஒரு வேசமும் உள்ளுக்குள் ஒரு வேசமும் போடுகிறேனே உண்மையில் நான் யார்? நல்லவனா? கெட்டவனா? எதற்காக இந்த இரட்டை வேசம்? எது என் சுயம்? எங்கே என் சுயம்?
தொலைத்து யார்? நான் தான். நல்ல பெயர் வாங்க ரெட்டை வேசம் போட்டு போட்டு ஒட்டுமொத்தமாய் என்னையே நான் ஒழித்து கட்டிவிட்டேன். யாருக்கு நான் நல்லவனாயிருக்க வேண்டும்? உனக்கா?
ஊருக்கா? நீ நல்லவன் என்கிறாய் நிறைய பேர் கெட்டவன் என்பதேன்? உண்மையில் நான் யார்? நல்லவனா? கெட்டவனா? யாருக்கு நல்லவனாயிருக்க வேண்டு்ம்? உனக்கா? ஊருக்கா? இல்லை எனக்கு.
ஆமாம் எனக்கு நான் ஏற்றவனாய் இருக்க வேண்டும். மாற்றம் வர வேண்டுமெனில் என் சுயக்கண் கொண்டு எதையும் பார்த்து பழக வேண்டும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...