Short story
May 5, 2017
சிறுகதை
SHARE

நம் திறமை எப்போது வெளிப்படும் என்பதை நம்மை தவிர வேறு யாரும் தீர்மானித்து விட முடியாது. தோற்போம் எனத் தெரிந்தும் விடாது போராடும் குணமே நம்மை வெற்றிக்கு இட்டுச்செல்லும்
மந்திரம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதென்பதெல்லாம் பொய் மொழி. வள்ளுவ தர்ம படி முயற்சித்தால் முடியாதது இல்லை. கிழப்பருவம் எய்தினாலும் கிளியின் றெக்கை நரைக்காது என்ற
வைரமுத்து வரியொப்ப வாழ்க்கையில் நம் உடல் தான் முதிர்ச்சியுறுகிறதே ஒழிய நம் உள்ளமல்ல. ஆகச்சிறந்த வெற்றிகளுக்கெல்லாம் ஊக்குவிப்பும் உற்சாகமுமே உறுதுணையாய் இருந்துள்ளன. ஆக
உன்னை நீயே உற்சாகப்படுத்து. உசுப்பி விடு. வெற்றியின் பொருள் தோல்வி இல்லாமை இல்லை. அதன் உண்மையான பொருள் எப்படியாகிலும் முயற்சியின் பேரில் முடிவான இலக்கடைவதே. போரை
வெல்வதே வெற்றி ஆனால் எல்லா களங்களிலும் அல்ல என்ற உண்மை உணர். உனக்கானதை உனக்குள் தேடு. எல்லாம் உனக்குள் தான் மறைந்து கிடக்கிறது. உயிர் போகிற கணத்திலும் உறுதி இழக்காதே.
உன்னை ஒருவன் வெல்லத் துணிகிறானானால் அவன் உன்னிடத்தில் தோற்க துணிந்திருக்க வேண்டும். தோழனே மாற்றம் நிலையானது என்ற எண்ணத்தை மனதில் எழுது.நேற்று உன்னால் முடியாது போன ஒன்று
இன்று முடியலாம். இல்லை முடியும். உன் முயற்சி முடங்காதவரை முடியும்.பத்து முறை முயன்றதில் ஒரு முறை ஜெயித்தாயானால் பத்து முறை ஜெயிக்க நூறுமுறை முயற்சி செய்.முயற்சியை
அதிகப்படுத்துவதொன்றே வெற்றியை அதிகப்படுத்தும் வழி. தொய்வின்றி முயற்சி தொடர். பட்ட துயர்யாவிற்கும் பலன் உண்டு. நன்றி
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...