Back
Short story
April 22, 2017
சிறுகதை
SHARE

ஊருக்குள்ள யாராச்சும் உம்புள்ள என்ன செய்றானு கேட்டாக்கா வேறாரு முன்னாடியும் நான் வெக்கப்படக் கூடாதுனு வெட்டியா இருக்கும் என்ன விட்டுக் கொடுக்காம வேலைக்கு போறானு
வெடுக்கா சொல்லி வந்தவளே ஊருக்குள்ள இல்லாத நோவு உனக்கு வந்தாலும் ஊசியும் போடாம எங் கண்ணுல துளி தூசி விழுந்தாலே துடியா துடிப்பவளே தூயவளே அப்பங் கூட கோவிச்சிக்கிட்டு சோறு
திங்காம வீம்போட நானும் வீட்ட விட்டு போக "போட்ட சோத்த திங்காம வந்திட்டியே ராசானு" பொறவுக்கே சோத்துப்பையோட சோகத்தையும் சுமந்து வந்தவளே எத்தன சென்மம் நான்
எடுத்தாலும் உம்புள்ளயாவே பொறக்கனும். எடுக்கும் பிறவி எல்லாத்திலயும் உனக்கு முன்ன நான் இறக்கனும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...