Short story
November 19, 2016
சிறுகதை
SHARE

பழைய பணம் செல்லாது.!
அடே
அரசாங்க
அராஜகர்களே
நித்தமும்
ரத்தஞ்சிந்தி
சேர்த்த பணம்
செல்லாதா??
மஞ்சப் பயிருக்கு
மருந்து வாங்க
வச்சிருந்த பணமெல்லாம்
இனி கரையானுக்கு தானா..?
ஐயா கடவுளே
கையில இருந்த
ஐநூற மாத்தத்தான்
ஆறு மணியிலிருந்து
காத்து கிடக்குறேனே.!
வயிறெல்லாம்
எரியுதே.....
"என்னையா வரிசை
கலையுது"?????
ஐயா வங்கிக்காரறே
என்னயா ஆச்சு????
பணமில்லையா???
பாடுபட்டு சம்பாதிச்ச
பணத்த செலுத்தத் தான்
நான் படும்
நாய்படாத பாடா இருக்கே..!!!
ஆறுமாச பொழப்பு
அழியப் போகுதே..!!
வேர்வை விட்டு வளர்த்த
வெவசாயம் வீணாப் போகுதே..!
என் பன்னுவேன் ஆண்டவனே..!!!
கொற வயிறும்
அர உயிருமா கெடக்கும்
ஆடு மாடுகளுக்கும்
வூட்டு புள்ளைகளும்
எப்படி சோறு போடப்போறேன்..!!!
இனி யோசிக்க
என்ன இருக்கு
இடுப்ப காத்து கெடக்கும்
கயிறே
என் கழுத்த நெருக்கு...!!!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...