Back

Poem

December 11, 2021

கவிதை

SHARE

கவிதை

காதலாய் அன்பாய் கனிவாய் மன்னிப்பாய் இப்படியெல்லாம் கூட வேண்டியதில்லை. "ச்சீ சனியனே" என்கிற அருவருப்பாய் "உனக்கெல்லாம் சாவே/ரோசமே வராதா" என்கிற
சலிப்புணர்வாய் "என்னையே தொந்தரவு செய்கிறாயே நீயெல்லாம் நல்லா இருப்பியா " என்பது போல சாபமாய் "தயவு செய்து ஆளவிடு " என புறக்கணிப்பாய் எதாவது
பதிலெழுது. இது எதுவும் முடியாத பட்சத்தில் ஒரு ம் ஆவது எழுதி அனுப்பு. என் வாழ்க்கையில் எனதண்மையில் என்னோடு இல்லாவிட்டாலும் நானிருக்கிற உலகத்தில் தான் நீயும் இருக்கிறாய்
என்கிற நினைப்பே நான் வாழப் போதுமானது. அதனால் கருணை கூர்ந்து உன் பெயரிட்டு ஒரு கமாவையேனும் அனுப்பி வை.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...