Back
Poem
September 11, 2021
கவிதை
SHARE

குடி தத்துவம் :- எங்கிருந்தோ வந்து, நீ கேளாமலே, வெறுமையாய் கிடக்குமுன் மனக் கோப்பையில் பொங்கி, நுரைத்து, வழிந்து, ததும்ப அன்பை ஊற்றுவார்கள். வரலாறு நீண்ட, மொழி
பார்த்திராத மதுரமூறும் சொற்களை எல்லாம் அள்ளி அள்ளி வீசுவார்கள். போத்தல் போத்தலாக அன்பைப் பருகச் செய்து, கொஞ்சமும் திகட்டாத அதன் போதைக்கு பழகி நீ, தள்ளாடித் தவித்து, மறு
போத்தல் பிரியத்துக்காக கை நடுங்க மனம் ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொழுதில் கோப்பையோடு உன்னையும் கவிழ்த்துடைத்துவிட்டு காணாமல் போய் விடுவார்கள். எதையும் நம்பாதே.
உஷாராயிரு.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...