Back

Poem

March 1, 2021

கவிதை

SHARE

கவிதை

வீட்டில் இருந்து சென்னை வந்தது, உண்டது, புத்தகம் வாங்கியது என எதற்குமே நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வில்லை. (சில்லறையாக ஒரு 50 ரூபாய் பர்சில் இருந்து அவ்வளவே).
இத்தனைப் புத்தகங்களும் (இன்றைய உணவுமே கூட) உங்களின் அன்பின் கிளைகளில் பூத்தவை. இந்தப் புத்தகம் அனைத்திலும் உங்கள் அன்பின் மலர்களின் வாசனையை உணர்கிறேன் நான். என்ன
சொல்வது என்றே தெரியவில்லை. நான் பொதுவாக எல்லோரிடத்திலும் பரிவுடன் இருப்பேனே ஒழிய யாரையும் பதிலுக்குக் கூட நேசித்தது இல்லை. அப்படி இருந்தும் இப்படி ஒரு பெரிய
மகிழ்ச்சியை, ஒரு பெரிய அன்பின் மலர்கொத்தை என் கைகளில் தந்த உங்களுக்கு எக்கச்சக்கமான எழுத்து முத்தங்கள். உண்மையில் இதை டைப்பிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் என்
கண்ணோரம் உங்கள் அன்பு கண்ணீராகவும் வழிந்து கொண்டிருக்கிறது. ஐ லவ் யூ. ❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...