Back

Poem

December 29, 2020

கவிதை

SHARE

கவிதை

எது நம்ம கிட்ட புடிச்சு.. எதால ஈர்க்கப்பட்டு பழகுனாங்களோ ஒரு கட்டத்துக்கு மேல அதுவே சலிச்சு புளிச்சு போயி.. நம்ம கிட்ட இருந்து விலக தொடங்கிடுறாங்க. அவங்கள எல்லாம்
அப்படியா நன்றி ங்கறதோட முடிச்சுக்கனும். அன்ப காட்டுறாங்க அத காட்டுறாங்கனு உறவக் கொண்டாடவே கூடாது. ஏன்னா... அன்பு மயிரு உயிரு ஒறவு எதுமே நிலையில்ல. தனியா வந்தோமா.. தனியா
வாழ்ந்தோமா.. தனியா செத்தோமானு இருக்கனும். அவங்க அன்பு செய்யுறாங்க, இவங்க துணையா இருக்காங்க னு அதுக்கு பழகி ஆசப்பட தொடங்கிட்டோம் அவ்வளவு தான் வாழ்க்கை முடிஞ்சது. காலம்
பூரா ஏங்கி புலம்பி வாடி சாக வேண்டியது தான். யாரும், எதுவும் வேணாம். தான்தோன்றித் தனமா, தனக்கு தோன்றத, யாரையும் தொந்தரவு பண்ணாம தன்னிஷ்டத்துக்கு பண்ணி கிட்டு போய் கிட்டே
இருக்கனும். இங்க அன்பு இருக்கே.. இங்க இளைப்பாறல் இருக்கே னு யோசிச்சோம்.. உச்சிக் கூட்டி கிட்டு போயி கழுவேற்றம் தான். அதனால... சகலத்தையும் மூடி கிட்டு.. பிச்சக் காரனப்
போல.. பித்தனப் போல.. நாடோடிய போல எங்கும் தங்காம யாரையும் சொந்தம் கொண்டாடாம வாழ்ந்துட்டு போயி டனும். இது தான் என்னிந்த வாழ்க்கையோட ஏக்கம். ஆசை. எல்லாம். ம்,

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...