Poem
December 17, 2020
கவிதை
SHARE

யார் போனால் என்ன உன்னை நேசிக்க எப்போதும் யாராவது உண்டு என்பதை வாழ்க்கை அடிக்கடி நிகழ்த்தி காட்டிக் கொண்டே இருக்கிறது. போனவ ள் (ர்) நினைவில் ஏனடா புலம்பிச் சாகிறாய் உன்னை நேசிக்க இந்த உலகில்
எத்தனை பேர் பாரென அடிக்கடி அன்பானவர்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. உண்மையிலே உலகம் அன்பின் கட்டுமானம். நேச பாசத்தோடு அன்பின் கண் கொண்டு உலகைப் பாருங்கள். உங்களுக்கு வேண்டிய அன்பு
உங்களுக்கு அருகே தான் இருக்கிறது. இதுவரையில் என் வாழ்க்கையில் வந்து போனவர்கள் ஏராளம். இருந்தாலும் இன்னும் என்னை அன்புச் செய்கிறவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இது போல் உங்கள்
வாழ்விலும் போனவர்களை எண்ணிப் புலம்பி பொழுது கழிக்காமல் உங்களை நேசிக்கிறவர்களை நேசித்து நெஞ்சு களிப்புறுங்கள்.
- தாளாத பிரிவின் துயரத்துடன் பித்தன்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...