Poem
September 15, 2020
கவிதை
SHARE

நமக்கு சொந்தமான வீட்டை நமக்கு ஏற்றபடி பிடித்தபடி மாற்றி அல்லது மறுகட்டுமானம் செய்து கொள்ளுவதைப் போலத் தான், நாம் நமக்கே நமக்கென்று நினைக்கும் மனிதரை நம் அன்பால் பூசி மொழுகி மாற்றி நமக்கே
நமக்கானவராக ஆக்கிக் கொள்ள விழைகிறோம்.
இதில் தவறேதும் பெரிதாக இல்லை என்கிற போதும், வீட்டுக்கும் மனிதனுக்குமான வித்தியாசம் இருக்கிறதில்லையா? உங்கள் அன்பு வலுக்கட்டாயமாக யாரையும் மாற்றக் கூடாது. மாற்றம் என்பது உங்கள் அன்பின் கண் தானே
நிகழ்ந்தாக வேண்டும். அவர்களே அவர்களை உங்களுக்கு ஏற்றபடி சுய விருப்பத்தின் பேரில் மாற்றிக் கொள்கிற படி நீங்கள் அன்பு செய்ய வேண்டும். அன்பு செய்தல் என்பது தவம். அன்பு ஒரு போதும் பொய்த்துப்
போகாது. அன்பு செய்யுங்கள். அன்பினால் மாறட்டும் உலகம். 💙
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...