Poem
August 11, 2020
கவிதை
SHARE

அணி மணி ஏதும் இல்லாமல் பணிப்பெண் போல சாதாரணத்திலும் சாதாரணமாய் இருக்கும் என்னையா உனக்கு பிடித்திருக்கிறது நான் என்ன அழகாகவா இருக்கிறேன் என்கிறாய் நீ. ஆமாம் இந்த மலர்
மான் முயல் கிளி எல்லாம் அழகாய் இருப்பது எதனால்? என்று பதிலுக்கு கேட்கிறேன் நான். பதில் சொல்லத் தெரியாமல் அகல் விளக்கு கண்களால் சுடர் விடும் பார்வையேந்தி நீ திருதிருவென
விழிப்பதைப் பார்த்து நானே சொல்லுகிறேன். அவையும் உன்னைப் போலவே அலங்காரம் பண்ணிக் கொள்வதில்லை. மேலும் உடையும் பண்ணிக்கொள்வதில்லை. அது தான் அந்த அழகின் ரகசியம். மட்டுமன்றி
உன்னைப் போன்ற சாதாரணத்திலும் சாதாரணமான பெண்களைப் பார்த்தால் வசந்த கால மரத்தைப் போல மனம் பூ பூத்து காதல் மணம் வீசத் தொடங்கி விடுகிறது. இன்னும் கள்ளி , பிடித்துப்
போவதற்கு அழகு தேவையே இல்லை. அன்பு கொண்ட நெஞ்சுக்குள் தாய்மை சூழ் கொண்டு விடும் . பிறகது எல்லோரையும் பிள்ளைப் போலவே பிரியம் செய்யும். அழகு வெறுப்பு புறந்தள்ளல் என்று
எதையும் சட்டைச் செய்யாமல் அன்பை மட்டுமே பொழியும். - ர. அஜித்குமார் ( பெ. மோ.பித்தன்)
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...