Back
Poem
June 9, 2020
கவிதை
SHARE

எங்கேனும் இருந்து வந்து
ஒரு துதிக்கையும் தந்தமும்
வளைத்து நொறுக்கி
என்னை குத்திக் கிழிக்குமோ என்று பயமாய் இருக்கும் படி
செத்த யானைப் போல
கரு கரு வென்று
பேருருவோடு
அமைதியாய் படுத்து கிடக்கிறது இரவு.
ஒரு மின் மினி வெளிச்சமாய்
மனத்தினுள்ளிருந்து
புறப்பட்டு வருகிறது
உன் நினைவு.
வெளியில்
காற்றில் அசையும்
மரத்தின் கிளையிலிருந்துதிரும்
பூவாய்
உதிர்கிறதென் கண்ணீர்.
அந்த மலரை
முகர்ந்து பார்த்து நகரும்
ஆட்டுக் குட்டியாய்
மன மூலையிலிருந்து நடக்கத் தொடங்குகிறாய் நீ.
- பித்தன்
@june 8 - 9.51 pm
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...