Back

Poem

April 10, 2020

கவிதை

SHARE

கவிதை

எல்லோருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள். லவ் யூக்கள்.

நேற்று இந்து மதத்தை விமர்சித்து இந்து என்பது முட்டாள்களின் மதம் என்று ரெண்டு பதிவுகள் இட்டிருந்தேன். அதற்கு

"உண்மை தான் இந்து முட்டாள்களின் மதம் இஸ்லாம் ஒரு ரெட் லைட் மதமும் கிறிஸ்துவம் ஒரு விபச்சாரி மதமும் என்றே நடுநிலையாக பேசவும்"

"இந்த குண்டு வைக்குற மதத்தை எல்லாம் ஏதாவது எழுதலாமே"

இவ்வாறு கருத்துக்கள் வந்தன. ஆனால் ஒருவரும் இந்து மதத்தில் இவ்வாறு இல்லை. அல்லது இருந்திருந்தாலும் இப்போது மாறிக் கொண்டிருக்கிறது என்று மறுக்கவில்லை. இதிலிருந்தே விளங்கி இருக்கும். நான்
சொன்னதில் தப்பு இல்லை என்று.

மற்ற மதங்கள் எப்படி என்று எனக்குத் தெரியாது. குண்டு வைக்கலாம் விபச்சாரம் செய்யலாம். அது எனக்கு தெரிந்திருக்க வில்லை. தெரிந்தே இருந்தாலும் அதன் தாக்கமும் பாதிப்பும் வேறு.

அண்மையில் நடந்த ஒரு சம்பவம். நண்பரின் வீட்டுக்கு வந்த ஒரு நண்பன் ஒருவன் வீட்டுக்கு வெளியிலே நின்று கொண்டு இருந்து பேசிக் கடந்து விட்டான். இத்தனைக்கும் அந்த நண்பர் அவனை உள்ளே வா என்று அழைத்தும்
அவன் வரவில்லை. ஏனென்றால் அவன் ஒரு கடைநிலை சமூகத்தவன். ஏன்டா உள்ள வர மாட்ற என்று கேட்டதற்கு அவன் சொன்னானாம் "இல்ல, அப்றம் உங்க அம்மா அப்பா எதாவது சொல்லுவாங்க உன்ன" என்று. இந்த பதில்
அவன் வாயிலிருந்து வரக் காரணம் என்ன என்று யோசியுங்கள். அவனுக்கு இந்த பயம் எங்கிருந்து போதிக்கப் பட்டிருக்கும் என்று சிந்தியுங்கள். அவன் குடும்பம் எவ்வளவு இன்னல்களை கண்டு கடந்திருக்கும் என்ன
என்று யோசியுங்கள். அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒட்டு மொத்த சமூதாயத்தின் அழுத்தப்பட்ட மன நிலை பற்றி யோசியுங்கள். இதுபோலான ஏராளமான வன் தாக்குதல்களை நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள் இந்துக்கள் .

இந்து மதம் ஒருவனை அடிமை படுத்துவதோடு நில்லாமல் அவனுக்கு அவனுள்ளேயே ஒரு தாழ்வுணர்ச்சியை உண்டு பண்ணுகிறது. உளவியல் ரீதியான தாக்குதலை நிகழ்த்துகிறது. இது சரியா? பிறப்பளவில் ஒரு சமூகத்தை மட்டம்
தட்டி ஊரிலிருந்தே புறந்தள்ளுவது சரியா?

மேலும், எங்க ஊரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு "உன் பொச்சுல ஒரு குண்டா பிய்ய வச்சு கிட்டு ஊரான் பொச்சு நாறுது னு சொன்னா என்ன அர்த்தம்" என்று.

நான் தெரிந்தோ தெரியமாலோ இந்து வாக பிறந்து விட்டேன். நான் வாழ்கிற இருக்கிற சமுதாயத்தை முதலில் மாற்ற வேண்டிய கடமை உள்ளது. அல்லது அதிலிருந்து விடுபட்டு வர வேண்டும்.

உங்களுக்கே நான்கு தெரியும் ஒன்றிலிருந்து விடுபடுவதென்பது அத்தனை எளிதில்லை. ஆக, நான் இருக்கிற இடத்தில் இருந்தபடியே விமர்சிக்க தொடங்கி இருக்கிறேன். ஒன்று என் விமர்சனத்தை ஏற்று கொஞ்சமேனும் மாற
முற்படுவார்கள்./(முற்படுங்கள்.) அல்லது என்னை வசை பாடி அவர்களே அவர்களில் இருந்து என்னை புறந்தள்ளுவார்கள். (புறந்தள்ளுவீர்கள்)

உங்களின் மாற்றம் அல்லது என் வெளியேற்றம் நடக்கிற வரை விமர்ச்சிப்பேன். என்னை, உங்களில் இருந்து புறந்தள்ளி பின்னும், உங்களின் கொடுமைக்கு இலக்காகி அடி வாங்கிய மக்களோடு மக்களாய் நின்று, புழுத்து
நாற்றமடிக்கும் உங்களின் ஒன்றுக்கும் உதவாத கொள்கைகளையும் வேதங்களையும் கொழுத்துவேன். ஏசுவேன். கல்லெடுத்து கூட வீசுவேன்.

நன்றிகளுடன் பித்தன். (ர. அஜித்குமார்)

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...