Poem
April 8, 2020
கவிதை
SHARE

மதம் மனிதனை முட்டாளாய் ஆக்கும். என்ன தான் சொன்னாலும் இதனை மறுப்பதற்கில்லை. மதம் ஒழிந்தால் சாதி ஒழியும். சாதி ஒழிந்தால் தீண்டாமை ஒழியும். தீண்டாமை ஒழிந்தால் சமத்துவமான ஒரு சமூகம் உண்டாகும்
என்பதில் ஐயமில்லை. மதத்தை ஒழியுங்கள். அல்லது அதனது அடி நாதமாய் இருக்கிற வேத மற்றும் புனித சாஸ்திரங்களை ஒழியுங்கள். மனிதனை, மனிதனைக் கொண்டே மட்டம் தட்டித் தாழ்வுறச் செய்கிற சக்தி
மதமாயிருந்தாலும், வேதமாயிருந்தாலும், உலகையே படைத்ததாய் சொல்லப்படுகிற கடவுளாய் இருந்தாலும் சரி தீயிட்டு கொளுத்துங்கள். கல்விட்டெறியுங்கள். எப்படியேனும் அழித்தொழியுங்கள். அன்பையும்,
பகுத்தறிவார்ந்த கல்வியையும் விஞ்சிய ஒரு புனித மற்றும் ஆக்கப் பூர்வமான சக்தி உலகில் வேறில்லை. ஆக, அன்பு செய்யுங்கள். கற்று, பின் கற்பியுங்கள். ❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...