Back
Poem
March 30, 2020
கவிதை
SHARE

நேற்று வரை மரமிருந்த அந்த இடத்தை வளைய வளைய சுற்றி வந்தது அந்தப் பறவை. காற்றைக் கிழிக்கும் அதன் அலகில் இழப்பின் கோவம். பட படக்கும் அதன் சிறகுகளில் மரண வீட்டில்
மாரடிக்கும் பெண்ணின் துக்கம். உயரத்தில் வட்டமடித்த பறவை எனக்கு நேர் மேல் வந்து வெட்டிய மரத்திற்கு ஈடாய் இன்னொரு மரத்திற்கான விதையை என்னருகில் எச்சமாய் இட்டு நகர்ந்தது.
காலையில் சுட்டுத் தின்ற அதன் முட்டை வயிற்றுக்குள் குஞ்சு பொரித்து குடலை கொத்தியது. .
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...