Back

Poem

December 22, 2019

கவிதை

SHARE

கவிதை

சகலத்தினின்றும் விடு பட்டு விடலாம் போல் இருக்கிறது. யாதிலும் ஒரு போலித்தன்மை ஒரு அலட்சியம் இருப்பதாகப் படுகிறது. முற்றும் துறந்து விட்டு காற்றோடு காற்றாகக் கை வீசிப் பேசிக் கொண்டு கால் போனப்
போக்கில் போய் விடலாம் என்று தோன்றுகிறது. ஆனால் முற்றும் துறத்தல் என்பது முக்தி அல்ல. எதிலிருந்தும் விடுபடுதல் அதற்கானத் தீர்வு அல்ல. வாழ்க்கையை எதிர் கொள்ளத் தெரியாதவன், வாழத் திராணி இல்லாதவன்
எடுக்கிற முட்டாள் தனமான செயல் தான் இந்த விடுபடுதலும் முற்றும் துறத்தலும். ஆமாம், நான் முட்டாள் என்பதை அடையாளம் கண்டு கொண்டேன். இந்த முட்டாள் தனத்தில் ஒரு நிம்மதி இருக்கிறது. இந்த முட்டாள்
தனத்தில் ஒரு நிறைவு இருக்கிறது. மனச் சமநிலைப் பேண இந்த மாதிரியான சைகோத் தனங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டாக வேண்டி இருக்கிறது. உள நலம் பேணும் பொருட்டு முட்டாளாகவே சைகோவாகவே இருந்து விட்டுப்
போகிறேனே. போங்கள்.

  • பெ. மோ. பித்தன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...