Back

Poem

July 30, 2019

கவிதை

SHARE

கவிதை

ஒரு சொல் கொடு சகி. எழுதி நெடுநாளாயிற்று. நீயற்ற வெறுமையை நான் எழுதி தீர்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது எழுதும் திராணியுமிழந்து கிடக்கிறேன். சொல்லும் இல்லை. பொருளும் இல்லை. தூண்டிலில் சிக்கி
மீனுக்கு இரையாக்கும் புழுவாய், உன் நினைவூசியில் என்னை குத்தி தொங்க விட்டு கவிதை மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். சகி! உன்னை எண்ணும் கணத்தில் எல்லாம் நான் பறவையாகிப் போகிறேன். அந்தரத்தில்
அலைகிறேன். அப்படியே மிதந்து மிதந்து நினைவு இழந்து செத்து விட்டால் நிம்மதியாக இருக்கும். சரி அதிருக்கட்டும். சாவு வரும் போது தானே வரும். வா வா என்றால் வந்து விடுமா என்ன? இமைக்கு நடுவில் நீர்
தேங்கி உறைந்து நிற்கிறது சகி. எச்சிலுமிழ்வதை போலே னும் ஒரு சொல்லுமிழேன். தவிப்பின் துடிப்பில் செத்து விடுவேன் போல. எழுத வேண்டும். எழுத்து வேண்டும். ஒரு சொல்.... சொல்.... சகி...
சகி...வலிக்கிறது.
ஆங்...
வலி.. வலிக்கட்டும்
விண்... விண்..
சுரீர்... பளார்
சதக்...
ஆ...
ஐயோ... அப்பா..
இன்றில்லை.. நேற்றில்லை
நாளைக்கும்.. முவ்வேளைக்கும்
வாழ்வுக்கும்..
வலி செய்..
நான் இப்படி கவிதை செய்கிறேன்...

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...