Back

Poem

July 10, 2019

கவிதை

SHARE

கவிதை

நீ சாதாரணமான பெண் தான் ...
ஆடம்பரமற்றவள்
ஆனாலும் அழகி..
உன்னை போலவே
இந்த கவிதையையும்
இயல்பான சொற்களாலே
எழுத போகிறேன்..
ஆனால்
உன்னளவிற்கு அழகாய் இருக்குமா என்றால்
சந்தேகம் தான்..
உன் குழந்தைமை பேரழகானது ..
உன் அன்பு
தாய் பாலைப் போல பரிசுத்தமானது..
உன் குரலிலுள்ள துள்ளல்
இசையின் தண்மையுடையது..
அழகெழில் பாவை
உன்னை பற்றி
எந்த பா வை எழுதினாலும்
அது உன்னை போல் இராது.
உன்னழகிற்கு ஈடும் ஆகாது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...