Poem
April 20, 2019
கவிதை
SHARE

இந்த வாழ்க்கை எனக்காகவும்
இந்த வாழ்க்கைகாக நானும்
நேர்ந்து விடப் பட்டிருக்கிறோம்.
நான் வாழ்தலுக்காகன சௌகர்யங்களை
அதுவே செய்து தருகிறது.
நான்
எந்த நேரத்தில்
எதை செய்ய வேண்டும் என்பதை
அதுவே முடிவு செய்கிறது.
இந்த நேரத்தில் நான் இதை செய்வதாகவே இல்லை.
ஆனால் வாழ்க்கை செய்ய வைத்திருக்கிறது.
எனக்கு நேர்கிற கஷ்ட நஷ்டங்களாகட்டும்
இன்ப துன்பங்களாகட்டும்
யாவும் எனக்கானவை மட்டுமே .
வாழ்க்கையும்
அதன் சூழ்நிலை அமைவுமே
நான் எதை செய்ய வேண்டும் என்பதையும்
நான் எப்படிபட்டவனாக இருக்க வேண்டும் என்பதையும்
முடிவு செய்கின்றன.
மேலும் நான் செய்கிற எதற்கும்
இங்கு இதை டைப் செய்வதற்கும் கூட
காரண கர்த்தா நான் இல்லை.
வாழ்க்கை என்னை செய்யச் சொல்லி நிர்பந்திக்கிறது.
வாழ்க்கை என்னை வாழச் சொல்லி வற்புறுத்துகிறது.
"நீ அனுபவிக்கிற எல்லாம் உனக்கானவை" என்ற அசரீரியாக
காதோரம் ஒலித்து கொண்டே இருக்கிறது.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...