Back
Poem
April 20, 2019
கவிதை
SHARE

எனக்கது புரியாமல் இல்லை.
தெளிவாகே புரிகிறது.
நியாயமானதும் தான்.
இருந்தாலும் அதை நான்
ஏற்றுக் கொள்வதாகவோ
ஒப்புக் கொள்வதாகவோ இல்லை.
உன் நியாயம்
எனக்கு நியாயமானதாகத் தோன்றினாலும்
அதை ஏற்று நடக்கிற படி
என் வாழ்தல் இல்லை.
இப்படி எல்லாம்
இருக்கிற என்னை
பயித்தியம் எனச் சொல்.
கூர் நெடுவாளாய்
வளைந்த கொடுவாளாய்
நெஞ்சை பதம் பார்த்த
பாதகன் என சொல்.
வேறு எப்படி வேண்டுமானாலும் சொல்.
கவலையில்லை.
இது தான் நான்.
இப்படி தான் நான்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...