Back

Poem

March 27, 2019

கவிதை

SHARE

கவிதை

என் யாவுமானவள் நீ..
இப்போது உன் இல்லாமையால்
தீவு போல்
தனித்து விடப்பட்டு
தவித்து கிடக்கிறேன்.. நான்..
இது போலொரு நாளில்
இது போலோரு நடு இரவில்..
உன்னை நினைத்தபடி
உன் பெயரை உள்ளுக்குள் ஜெபித்த படி
வானத்தை வெறித்து கிடந்தேன்..
என் மனம் போல்
இருள் மண்டிகிடந்த வானாக விரிந்தாய் நீ..
மின்னும் விண்மீனிலெல்லாம்
உன் கண் விழிப்பாவையின் ஒளி..
திட்டு திட்டாய் என்னைச் சூழ்ந்த இருட்டில்
உன் நெடுங் கூந்தலின் கருமை..
இதோ
இப்போது
கிழக்கு மூலையில் இருக்கிற
நிலவு தான் அப்போதும் இருந்தது..
தேய்ந்து அல்ல..
முழுதாய்..
உன் மீதான
என் காதலை போல பூரணமாய்
பரிபூரணமாய்... இருந்தது.
அன்றிருந்த அந்த நிலவிலும்
இன்றிருக்கிற இந்த நிலவிலும்
உன் முகத்தின் மோகனம்...
சகி..
சாவும் வரை
இப்படியே..
உன்னை நினைத்தபடி..
மனித உணர்வு கடந்து
உன்னை அன்பு செய்தபடியே ..
காமமற்றுனை காதலித்த படியே....
நறுக்க நறுக்க வளரும் நகமாய்..
தீட்ட தீட்ட பொலிவுறும் வைரமாய்..
தோண்ட தோண்ட நீர் சுரக்கும் சுனையாய்..
உளி அடி பட பட உருபெறும் சிலையாய்..
என் வாழ் நாள் தீர தீர..
நான் சாக சாக..
உயிர் நோக நோக..
நினைவின் கணம் கூட கூட..
நெஞ்சில் ரணம் ஏற ஏற..
உயிர் போக போக..
உன்னை தீராமல்.. மாறாமல்
மானசீகமாய்..
ஆத்மார்த்தமாய்..
காதலித்து கொண்டே வேண்டும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...