Poem
February 24, 2019
கவிதை
SHARE

கொடும் நாகமென
என்னுள் ஏதோ ஒன்று
ஊர்ந்தேறுகிறது.
எல்லாச் சராசரிகளை போலத் தான்
நானும் இருக்கிறேன்.
கல் விழுந்தால் நதியும்
பெண் கண்டால் மனமும்
சலனப்பட்டே தான் தீருமா?
காண்பன மீதெல்லாம்
காமுறுதல் தான் மனிதமா?
ஆசைகளை
எந்த அறையில் பூட்டி வைப்பது?
இச்சையில்லாமல் இருத்தல் என்பது
இயலாதா ஒன்றா?
மனதின் கட்டளைக்கு
மறுக்கும் உடல் எதற்கு?
உயிரை அடைகாக்கும்
உடலுக்கு
உணர்ச்சிகளை
உள்ளடக்கம் செய்யத்தெரியாமல் போனதெப்படி?
கையில் அள்ள அள்ள
விரலிடை வெளியில்
கசியும் நீரென
கசிந்து விடுகிறேன்.
மூடியிருந்தாலும்
ஈட்டி பார்வையில்
ஆடைஊடுருவி
அம்மணமாய் பார்க்குதென் விழிகள்.
மனதிற்குள்ளேயே
ஒன்றுக்கு நூறுமுறை
காணும் ஒவ்வொருவரையும்
கற்பழிக்கிறேன்.
தீண்டாக் காமம்
தீர்த்த பின்
நல்லவன் போலவே
நாடகமும் ஆடுகிறேன்.
நல்லவன் என்று
நான் அணிந்திருக்கும் முகமூடி
எப்போது எங்கு
களைந்தெறியப்படுமோ?
எதற்கும் கொஞ்சம்
எச்சரிக்கையோடே இருங்கள்.
#மீள்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...