Back
Poem
February 24, 2019
கவிதை
SHARE

நீ என்னை நீங்கி விட்டாய்
இருந்தும் மனம்
எனக்கான உன் வரவை
எதிர் நோக்கி காத்திருக்கிறது.
நிச்சயம் நீ வருவாய் என்று
ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில்
மௌனம் சுமந்து நகரும்
நீளமான காத்திருப்பு
என்னுள் ஆழமாய் எதையோ விதைக்கிறது.
உறங்காமல்
கனா காண்கிறேன்.
எங்கெங்கோ
எண்ண உலா போகிறேன்.
மௌனத்தில் மனம் புதைகிறேன்.
சொற்களற்று விக்கி நிற்கிறேன்.
உன்/பெண் மார் மத்தியில் புதைவதினும்
இந்த மௌனப்புதையல்
மகிழ்வு ததும்புதுவதாகவே இருக்கிறது.
நீ மௌனம் கலையாம லுறங்கு
உன் பேசாத மௌனத்தில்
என்னை புதைத்து புளகாங்கித்துக் கொள்கிறேன்.
செத்து என்னை புதைத்த இடத்தில்
புல் முளைத்த பின்னேனும் வந்து
எனக்காய் சில சொல்லுதிர்த்து
அழுது விடு.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...