Back

Poem

February 22, 2019

கவிதை

SHARE

கவிதை

பத்தாவது வரைக்கும் படிச்ச பள்ளிக்கூடம்.காதல் னா என்னனே தெரியாம காதலிச்ச இடம்.சாயங்காலம் ஒரு ஆறு மணி வாக்கில அப்படியே சைக்கிள எடுத்துகிட்டு போனேன்.ஏதோ இலையுதிர்
காலத்துக்கு அடுத்து தளையற மரம் மாதிரி மனசுக்குள்ள பழைய ஞாபகங்கள் எல்லாம் பூ பூக்க ஆரம்பிச்சிடுச்சு. கவிதா. என்ன விட ரெண்டு வயசு மூத்த பொண்ணு. அவ தம்பி " அக்கா
இருக்க க்ளாஸ் ல தான் படிப்பேன்" னு சொல்லிட்டானாம். அதானல அவளும் அவனுக்கா ரெண்டு வருசம் பின்னாடி வந்து அவனோட ஒன்னாங் க்ளாஸ் இருந்து படிச்சாளாம். முட்டக் கண்ணி.
வயசுக்கு வந்தப்போ மைசூர் பாகு லாம் எடுத்து வந்து தந்தா. நான் முத முதலா கவிதை எழுதினது அவளுக்காக தான். பாட்டு கூட எழுதி இருக்கேன். "அணுவா உடலுக்குள் வந்த அவ
அணுதினம் உசுரத்தான் கொல்லுறாளே" னு போகும்... கடைசியா ஸ்லாம் நோட்ல எழுதி குடுத்த பாருங்க ஒரு நாலு வரி. செம கடுப்ஸ். இப்போ அவளுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைங்க
இருக்கு. //. // க்ளாஸ் அ கட் அடிக்கறதுக்காக சைக்கிள தூக்கி கிட்டு சார் உங்களுக்கு டீ வாங்கிட்டு வரோம் னு போய்டுவோம். அப்படி போகும் ஒரு நாள் நடு ரோட்லயே பல்டி அடிச்சி
எழுந்து வந்தோம். //. // இங்கிலீஷ் மேம். என்னைய ஈவ்னிங் க்ளாஸ் ல உட்காரவே விட மாட்டாங்க. நான் இருந்தாலே கூடி உட்கார்ந்து அரட்டை அடிக்க ஆரம்பிச்சிடுவோம். நீ வீட்டுக்கு
போயிரு டா உனக்கு அட்டன்டென்ஸ் கூட போட்டுர்றேன் னு கெஞ்சும். //. // நாங்க வச்ச மரமெல்லாம் இப்போ பெருசாகிடுச்சு. க்ரவுண்ட் சுத்தமா இருக்கு. முன்னலாம் விளையாடும் போது கல்
கல்லா குத்தும். இப்போ அப்படி இல்ல நல்லா இருக்கு. //. // தவமணி நானு ரவி எல்லாரும் கேங் வார் பண்ணுவோம். தீவிரமா. அடிதடி தான். ஒரு முறை சில்லி மூக்க லாம் உடைச்சி கிட்டு
வந்திருக்கேன். ஒரு வார் ல கூட நான் யாரையும் அடிச்சதில்ல. அடிச்சா வாங்கிட்டு வத்திடுவேன். ஏன்னா திருப்பி அடிச்சா அவனுக்கும் காயமாகும். நமக்கும் இன்னும் ரெண்டு அடி
சேர்ந்து விழும். சண்ட பெருசாகும். அதான். அப்பறம், சின்ன க்ளாஸ் பசங்களுக்கு போய் பஞ்சாயத்து பண்ணுவோம். டஸ்டர் ல சண்டை போடுவோம். முகமெல்லாம் சாக்பீஸ் ஆகிடும். சொல்லி
கிட்டே போகலாம். ❤️ ❤️ ❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...