Poem
February 18, 2019
கவிதை
SHARE

இன்று நாலு பேர்
என்னை தேடிக் கொண்டு வந்தார்கள்.
நான் நேற்றைக்கு செத்து விட்டேன் என்றேன்.
ஓ
அப்படியா
சரி
நாங்கள் நேற்று க்கு
முந்தின நாளில் வருகிறோம் என்று
போய் விட்டார்கள்.
வருவார்களா?
????????
காத்திருந்தேன்.
இன்று சொன்னதைப் போலவே
அவர்கள் நான் சாகவிருந்த
நேற்றுக்கு முந்தின நாள்
கை நிறைய பை நிறைய
என்னென்னவோ வாங்கிக் கொண்டு வந்தார்கள்.
இப்போது எதற்கு இதெல்லாம்?
நான் தான்
நாளைக்கு செத்து விடப் போகிறேனே என்றேன்.
சாகும் போதும் ஏன் எங்களுக்கு சிரமம் வைக்கிறீர்கள்?
நாளைக்கு எதற்கு ?
இப்பொழுதே செத்து விடுங்களேன்.
வந்த கையோடு அழுது
அஞ்சலி செலுத்தி விட்டு போகிறோம் என்றார்கள்.
சரி இருங்கள்
கொஞ்ச நேரம்
வாழ்ந்து விட்டு வருகிறேன் என்று
சொல்லி விட்டு வந்திருக்கிறேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...