Poem
September 21, 2018
கவிதை
SHARE

நெடுந்துயில் கொள்கிறது இரவு. எங்கும் நிசப்பதம். விளக்குகள் கூட கண் மூடிக் கொண்டன. அவை தன் ஒளி நாக்குகளை உள்ளிழுத்து வைத்து கொண்டு இரவெனும் மௌனத்தை உடுத்திக் கொண்டன.
இமைகள் மட்டும் தாழிட மறுக்கின்றன. வலுக்கட்டாயமாக மூடினால் மனதினுள் ஓயாத மௌன இரைச்சல். மனதோடு கத்தி, தூங்க விடச் சொல்லி கெஞ்சி கூத்தாடி உடல் துவண்டு போய் விட்டது. தசை
நாரெல்லாம் தளர்ந்தோய்ந்து தரையில் ஊற்றப்பட தண்ணீரை போல கட்டிலோடு கட்டிலாய் ஒட்டிக் கிடக்கிறது உடல். ஆனால் மனது கும்மாளம் போடுகிறது. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு
கொண்டாட்டம் என்பதை போல உடலின் இயலாமையில், அதன் தூக்கமில்லாத நிலையை கொண்டாடுகிறது. தலை மாட்டில் சுழன்று கொண்டிருக்கிற ஃபேனின் றெக்ககைள் காற்றை கிழிக்கிற போது உண்டாகிற
சபத்தத்தின் சுதி ஒழுக்கத்தை ரசிக்கிறது. காது மடலருகில் குய்யோ முய்யோவென்கிற கொசுவின் ரீங்கார சங்கீதத்தை மெச்சுகிறது. சன்னலின் வழியே அறையை ஊடுருவி பார்த்துக்
கொண்டிருக்கிற சோடியம் வெப்பர் லாம்ப்பின் ஒளி கரங்களை ஆராய்கிறது. தொலை தூரத்திலிருந்து கேட்கிற நாயின் ஒற்றை ஊளைச் சத்தத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. செத்து விட்ட
நேற்றை தினத்தை நினைத்து மௌன அஞ்சலி செலுத்துகிறது. தூங்கச் சொன்னால் தனிமையை யார் தாலாட்டி தூங்க வைப்பது என என்னையே கேள்வி கேட்கிறது.? ஆமாம் அது கேட்பதும் நியாயம் தான்.
தனிமைக்கு யார் துணை?
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...