Back
Poem
April 17, 2018
கவிதை
SHARE

அன்பியே...
உன் கடலொத்த அன்பில்
என்னை கரைத்து கொள்..
உன்னிலும் உன் அன்பிலும்
என்னை முழுக்கு..
என்னை கொஞ்சு..
உன் அன்பினாலேனும்
நான் வாழ்தல் சாத்தியப்படட்டும்..
துக்கம் வரும் போது
தூக்கத்தோடு நீயும் வேண்டும் எனக்கு..
வா என்று சொல்லும் போது வராது போனாலும்
போ என்று சொல்லும் போது
போகாமலாவது இரு..
நீயற்ற நான் ...
நீரற்ற மீன்..
உயிரற்ற ஊன்...
சுவையற்ற தேன்...
பிரியம் குறைக்காதே
இன்னும் இன்னும்
உன் அன்பை வர்க்கபடுத்து
என்னை திக்கு முக்காடச் செய்..
என் எல்லாம் நீயாகு...
கொடுத்தால் தான் கிடைக்கும் என்பதை பொய்யாக்கு..
யார் யாரை வெறுத்தாலும்
நானே உன்னை வெறுத்தாலும்
நீ என்னை வெறுக்காதே...
என் வாழ்க்கையின் பற்றுகோளே நீ தான்..
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...