Back

Poem

April 14, 2018

கவிதை

SHARE

கவிதை

பக்திக்குரிய திரு வாசகமே
படிக்கத் தூண்டும் திருப்பாவையே

நான் அடையத் துடிக்கும் திருப்புகழே

உள்ளத்தில் போர் மூட்டும் மகாபாரதமே
பொருள் விளங்காத தொல் காப்பியமே

காதல் மிகுந்த குறுந்தொகையே
களிப்பளிக்கும் கலித்தொகையே

இளமை திரண்டு நிற்கும் புறநானூறே
நான் புரட்ட வேண்டிய அகநானூறே

கருத்துக்கிரு பொருள் கொண்ட பரிபாடலே
என்னுள்ளே வீரம் கிளர்த்தும் பதிற்றுப்பத்தே

புலன் ஐந்துடைய ஐங்குறுநூறே
நல் அடை(யிரண்டு)உடைய நற்றிணையே

அளவில் சிறுத்தாலும்
அழகில் சிறந்த
முதுமொழிக் காஞ்சியே

நீளம் குறைந்த திருக்குறளே
என்னை நெறி படுத்த நினைக்கும் ஆசாரக்கோவையே

அழகுப் பாவையே
என் அன்பின் தேவையே...
வா வா.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...