Back
Poem
April 14, 2018
கவிதை
SHARE

பக்திக்குரிய திரு வாசகமே
படிக்கத் தூண்டும் திருப்பாவையே
நான் அடையத் துடிக்கும் திருப்புகழே
உள்ளத்தில் போர் மூட்டும் மகாபாரதமே
பொருள் விளங்காத தொல் காப்பியமே
காதல் மிகுந்த குறுந்தொகையே
களிப்பளிக்கும் கலித்தொகையே
இளமை திரண்டு நிற்கும் புறநானூறே
நான் புரட்ட வேண்டிய அகநானூறே
கருத்துக்கிரு பொருள் கொண்ட பரிபாடலே
என்னுள்ளே வீரம் கிளர்த்தும் பதிற்றுப்பத்தே
புலன் ஐந்துடைய ஐங்குறுநூறே
நல் அடை(யிரண்டு)உடைய நற்றிணையே
அளவில் சிறுத்தாலும்
அழகில் சிறந்த
முதுமொழிக் காஞ்சியே
நீளம் குறைந்த திருக்குறளே
என்னை நெறி படுத்த நினைக்கும் ஆசாரக்கோவையே
அழகுப் பாவையே
என் அன்பின் தேவையே...
வா வா.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...