Back
Poem
February 5, 2018
கவிதை
SHARE

அடிக்கடி
நேச நெருக்கடி கொடுக்கிறாய்
கிறுக்கா.
பெரிதாய் ஒன்றும் பேச மாட்டாய்.
குறைவான சொற்களில்
குளிர்வாக உணரச் செய்வாய்
முரடன் எல்லாம் இல்லை
பயங்கரமாய் முரண்டு பிடிக்கிறாய்.
பொருந்தா காதல் ஒன்றிற்காக
வருந்தாமல்
உன்னை வருத்தி கொண்டிருக்கிறாய் .
மறைமுகமாக
பல முறை
மனம் திறந்து விட்டேன்.
ஒவ்வொரு முறையும்
புரியாததை போல்
மழுப்பி விட்டாய்.
என் காதல் மடலை
கை தொடாமல்
திருப்பி அனுப்பி விட்டாய்.
கிடைக்காத வரத்திற்கு ஏனடா
கிடப்பில் தவம் கிடக்கிறாய்
உடையாத இந்த
உடலெனுங் கோப்பையில்
கடையாத அமுதிது
உன் கை சேர காத்திருப்பதை
இப்போதேனும்
அறிந்து வா டா
என் அன்புள்ள கிறுக்கா.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...