Back
Poem
December 30, 2017
கவிதை
SHARE

பழுக்க காய்ச்சிய இரும்பினும்
பலத்த காயம் செய்து விட்டாய்
பாசப் பொய் பேசி.
நீ தந்த
தூரோகத்தின்
துக்கத்தை
துளிகளாயழுது
தீர்த்து விடப் போவதில்லை.
அழுத்தமேறி துடிக்கும்
நெஞ்சின்
ஆழத்தில்
சேமித்து வைக்கிறேன்.
அழுது விட்டால்
ஆசுவாசப்பட்டு
தெளிந்து தேறி
மறுபடியும்
உன்னிடம் மண்டியிடுவேன்.
இப்போதும் உன் மீது
அன்பு இல்லாமல் இல்லை.
அதிர்ச்சியில்
உறைந்து போயிருக்கிறது
அவ்வளவே.
என்ன
இன்னொரு துரோகத்தை
தாங்கும் துணிவில்லை என்பதாலே
தள்ளி நிற்கிறேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...