Back

Poem

November 28, 2017

கவிதை

SHARE

கவிதை

குனியும் போதும்
நிமிரும் போதும்
ஒரு கையில் மார் துணியையும்
மறுகையில் மானத்தையும் பற்றி கொள்ள வேண்டியிருக்கிறது.

பேருந்து பயண நெரிசலில்
யாரும் உரச் கூடாதென
கூனி குறுகி
மழை கால குருவியாய்
நடுங்கி கொண்டு
நிற்க வேண்டியிருக்கிறது.

புழுதி பறக்க காற்றடித்தால்
முதலில் கைகள்
கண்களை மூடாமல்
கழுத்தடிக்கோடுகிறது.

இறுக்கமாகவும் இல்லாமல்
இளக்கமாவும் இல்லாமல்
எப்படி ஆடை அணிவது என
இன்னும் கற்றுக் கொண்டே இருக்கிறேன்.

ஒதுங்கி போனால்
"பெரிய உத்தமியாக்கும்"
நேர் பட நடந்தால்
"தேவடியாடா"
என்று எப்படியுமொரு ஏக வசனம்.

கழுத்தடி மேவும்
கண்களை கொண்ட
யோக்கிய புருசன் களின் நாக்கு
எப்படியுமெனை
நடத்தை கெட்டவளாக ஆக்கிவிடுகிறது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...