Poem
November 10, 2017
கவிதை
SHARE

எனது பார்வையில்
ஆணெனப்படுபவன்
பெண் பாலை ஒரு பகடையாக மட்டும் உருட்டி விளையாடி ஆட்டம் முடிந்த பின் வீசி எறிபவன்.
இங்கு பெண்ணெனப்படுபவள் கரும்பு.... மெல்ல மேல் கச்சை களைந்து இச்சை தீர்த்து ஒன்றுமற்ற சக்கை என தூர எறியப்படுகிறாள்.
நேர் கொண்ட பார்வை
நிமிர்ந்த நன்னடை
எவர்க்கும் அஞ்சாத் துணிவு
இவை எல்லாம் இருந்தால் பாரதி கண்ட புதுமை பெண் என நீங்கள் நினைக்கலாம் ஆனால் அப்படி இருக்கும் ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தால் அவள் காசுக்கு படுக்க வரும் பரத்தை ஆகிறாள். அதாவது உங்கள் பாசையில்
தேவடியாள்.
கோவலன் செய்ததை கண்ணகி செய்திருந்தால் அவளுக்கும் இதே பெயரை தான் சூட்டி இருப்பீர்கள். ஆனால் தவறு செய்த கோவலனுக்கு ஒரு பெயரும் இல்லையே.
ஏனென்றால் அவன் ஆண்.
பெண்கள் பலவீனர்களா? இல்லை ஆண்கள் பலமானவர்களா? இரண்டும் இல்லை. பெண்களின் பலம் கலாச்சார பூட்டால் பூட்டப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு பலம் எது என்பதும் ஆண்மை எது என்பதும் தவறாக கற்பிக்க
பட்டிருக்கிறது.
ஆண் பெண் பேதம் என்பது ஆறாம் அறிவு வேலை செய்ய தொடங்கும் முன்பிருந்தே தடுப்பூசியென தவறாமல் போடப்படுகிறது.
ஆணும் பெண்ணும் ஒன்றே(தசையாலான உடல்) என்றுணரும் காலத்தில் மட்டுமே நீங்கள் தவறாய் சொல்லிக் கொள்ளும் காரியங்கள் குறையும்.
ஒரு ஆணும் பெண்ணும் எப்படி நினைத்து பழகுகிறார்களோ... ஆனால் அவர்களின் சந்திப்புகளையும் சல்லாபங்களையும் பார்க்கும் நாம் அவர்கள் காதல் என்ற கண்ணோட்டத்தில் பார்த்து பழகி விட்டோம்.
மேலும்
" கற்பெனப்படுவது கரணமொடு புணர "
இது காலாவதியான வரி.
அல்லது
கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்
"கற்பெனப்படுவது காலோடு கால் புணரல்"
என்னை வையாதீர்கள். இது உங்கள் எண்ணம்.
மனமொன்றி நிகழும் உடன்போக்கே கற்பெனப்டுகிறது.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...