Back

Poem

October 16, 2017

கவிதை

SHARE

கவிதை

https://m.facebook.com/story.php?story_fbid=532494873777409&id=100010507024645 "மூத்தாள் உன்னை நேசித்தல் முறையோ முத்தான கவிதைவழி முத்தித்தாலும் தவறடி அத்தான்
என்றுநீ அழையாவிட்டாலும் நினைப்பாயே எத்தனை கொடுஞ்செயல் எனைபுரிய சொல்கிறாய் அன்புடையவளே ஆகாது சேராத காதலா? என்பின்றி உடலா? எப்படி சாத்தியம்? பேர்சொல்லும் பிள்ளையாய்
பெரியவள் நீயிருக்க வேறென்ன வேண்டும்! வேய்குழலே வேப்பம்நிழலே! ஈன்றெடுப்பது மட்டுமல்ல ஈன்றுகொடுப்பதும் மகவே! இன்றே சொல்லடி! இ"ம்ம்"மென சொல்லடி! ஆயிரத்தில்
நாமொன்றாய் இருந்து தினமும் பாயிரத்தில் பாடி வைப்போம் நம்காதலை." என்றுரைக்க நின்றிருத்தவள் நின்றபடி உறைந்தாள்! கண்ணி ரண்டும் கார்முகிலென கரைந்தாள்! பெரும் அழகுப்
பேதை அவளும் சிறுபிள்ளை போல விம்மினாள் விக்கினாள் சிணுங்கியும் சினந்தும் ஏதோ விளம்பினாள்!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...