Back

Poem

September 27, 2017

கவிதை

SHARE

கவிதை

அலுவல் முடிந்து அலுப்போடு வீடும் வரும் அவனை விடப்பிடியாய் தள்ளி விடுவேன் குளியல் அறையில் அறையும் குறையுமாய் காதில் நுரையுமாய் குளித்து முடித்து சுவற்றில் அறைந்த பந்தென
தாழிட்டிருந்த குளியலறை கதவை தடாலடியாக திறந்து கொண்டு விரைந்து சமையல் கட்டில் காய்களை நறுக்க கழுவிக் கொண்டிருக்கும் என்னை தேடிப் பிடித்து ஈரத்துண்டோடு மார் முடி உறுத்த
அவன் செய்யும் ஈரத்தழுவலிலும் மோட்டுவாய் வலிக்க அவன் கொடுக்கும் முரட்டு முத்..... களிலு...... ம்ம்ம்ம் உதட்டில் இருந்து மெல்ல உதடிறங்கி பின்னங் கழுத்தில் பல் பதிய
எச்சில் சில்லிட என்னை கடிக்கும் செல்லக் கடிகளிலும் ............ நேற்று என் முன்னே அவன் வேறெருத்தி அழகை வர்ணிக்கும் போது வந்த கோபத்தில் பனியாய் உறைந்திருந்த நான் அவன்
தாபத்தில் நீராய் கரைகிறேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...